Good news for low-income Sri Lankans

குறைந்த வருமானம் கொண்ட இலங்கையர்களுக்கான மகிழ்ச்சித்தகவல் !

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அஸ்வெசும  திட்டத்தில் உள்வாங்கும் இரண்டாம் கட்ட பணிகள் ஜனவரி மாதம்(2024) முதல் ஆரம்பிக்கப்படும் என சமூக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

முதலாம் கட்டத்திற்கான அனைத்துக் கொடுப்பனவுகளையும் வழங்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவும் இம்மாதம் 15ஆம் திகதிக்குள்ளும், அக்டோபர் மாதத்திற்கான கொடுப்பனவும் நவம்பர் இறுதியிலும் வழங்கப்படவுள்ளது.

இந்தநிலையில், அஸ்வெசும நிவாரணத் திட்டத்திற்கான விசேட வாரம் நாளை(06) ஆரம்பிக்கப்படவுள்gளதாக நலன்புரி நன்மைகள் சபையின் உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 11ஆம் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும்.

இந்த வாரத்தில் நிவாரணத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment